PulseNews
தொழில்நுட்பம்

நிலநடுக்கத்திற்கு பின் கருப்பாக மாறிய எரிமலை ஏரி: இந்தோனேசியாவில் குழப்பத்தில் விஞ்ஞானிகள்!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, அங்குள்ள 'சானோ ந்கோவாங்' (Sano Nggoang) ஏரியில் இருந்து கருப்பு நிறத்திலான கரிமப்பொருள் (Organic material) வெளியேறி கசிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஏரியின் நீர் கருப்பு நிறமாக மாறியுள்ளதாகத் தெரிவது, ஏரியின் அடிவாரத்தில் என்ன நடக்கிறது என்ற பெரும் புவியியல் கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. இந்தோனேசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்துடன் இந்நிகழ்வு தொடர்புபடுத்தப்பட்டு பேசப்படுகிறது. இருப்பினும், நிலநடுக்கமே இந்த மாற்றத்திற்கு காரணமா என்பதை விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இந்தோனேசியாவின் மேற்கு மங்கராய் பிராந்தியத்தில் உள்ள புளோரஸ் தீவில் சானோ ந்கோவாங் ஏரி அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண ஏரி அல்ல; புவிவெப்ப (Geothermal) அம்சங்கள் நிறைந்த ஒரு எரிமலை ஏரியாகும் (Volcanic lake). இந்த ஏரியில் திடீரென அடர் கருப்பு நிறப் பொருட்கள் மிதந்து காணப்படுகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே இந்த மாற்றம் நிகழ்ந்ததால் இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனினும், ஏரி நீர் உண்மையிலேயே தனது நிறத்தை மாற்றிக்கொண்டதா அல்லது நிலநடுக்கத்தால் அடிவாரத்தில் இருந்து மேலே கிளம்பிய அடர்ந்த வண்டல் மண் துகள்கள் நீரைச் சேறாகவும் கருமையாகவும் காட்டுகின்றனவா என்ற பார்வையும் நிலவுகிறது. உள்ளூர் மக்கள் இந்த விசித்திர நிகழ்வை "தாய் சானோ" என்று அழைக்கின்றனர். ஆனால், புவியியல் ரீதியாக 'தாய் சானோ' என்ற பெயரில் தனிப் பிரத்யேக அறிவியல் கோட்பாடுகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. BREAKING : Visuals of Dark material appears in Lake Sano Nggoang, West Manggarai, Indonesia, following the M7.7 earthquake. The phenomenon, locally known as “Ta’i Sano,” was reported . Authorities have not yet confirmed whether the earthquake directly caused the appearance of... pic.twitter.com/642iCLnCVw — World Updates (@Updatesofwworld) August 17, 2026 நிலநடுக்கத்தின்போது ஏற்படும் தீவிர நில அதிர்வுகள், ஏரியின் அடிவாரத்தில் படிந்துள்ள தளர்வான வண்டல் படிமங்களைக் கிளறிவிடக்கூடும். இதனால் நுண்ணிய வண்டல் துகள்கள் நீரின் மேற்பகுதி வரை பரவி நீரை அடர் நிறமாக மாற்றியிருக்கலாம் என ஒரு சாத்தியமான விளக்கம் முன்வைக்கப்படுகிறது. நிலநடுக்கங்களால் ஏரியின் வண்டல் படிமங்களில் ஏற்படும் மாற்றங்கள் புவியியலாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயல்முறையாகும். இது ஒரு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்றாலும், முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் போது, ஏரிக்கு அடியில் நிலச்சரிவுகள் ஏற்படலாம்; நிலத்தடி நீரின் ஓட்டமும் திசை மாறலாம். மேலும், சானோ ந்கோவாங் ஏரி ஒரு எரிமலைப் பகுதியில் அமைந்துள்ளதால், புவிவெப்ப மாற்றங்களும் ஏரியின் நீர் மற்றும் வண்டல் படிமங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே, நிலநடுக்கம் நடந்த அதே நேரத்தில் இது நிகழ்ந்தது என்ற ஒரே காரணத்திற்காக, நிலநடுக்கம் தான் முழு முதற் காரணம் என்று இப்போதே உறுதியாகக் கூறிவிட முடியாது. ஏரியில் மிதக்கும் கருப்பு நிறப் பொருளின் மாதிரிகளைச் சேகரித்து, ஏரி நீரின் வேதியியல் பண்புகளை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். நிலநடுக்கத்திற்கு முந்தைய, பிந்தைய நீர் மாதிரிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே இதில் ஏற்பட்டுள்ள துல்லியமான மாற்றம் என்ன என்பது தெரியவரும். அதுவரை, இந்தக் கருப்பு நிறக் கசிவு ஒரு புவியியல் புதிராகவே நீடிக்கிறது. இந்த ஏரி இந்தியாவில் இருந்து சுமார் 4,990 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள போதிலும், இந்த மர்ம நிகழ்வு இந்தியாவிலும் பரவலாகக் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், இந்தோனேசிய ஏரி நிகழ்வினால் இந்தியாவிற்கு எந்தவிதமான நேரடி ஆபத்தோ அல்லது அச்சுறுத்தலோ இல்லை என்று நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய 2 நாடுகளுமே பரந்த இந்தோ-ஆஸ்திரேலிய டெக்டானிக் அமைப்பின் கீழ் அமைந்திருந்தாலும், இரண்டுக்கும் இடையே மிகப்பெரிய தூர இடைவெளி உள்ளது. எனவே, இது ஒரு உள்ளூர் புவியியல் நிகழ்வு மட்டுமே தவிர, இந்தியாவில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதற்கான எந்தவித எச்சரிக்கையும் இல்லை.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நிலநடுக்கத்திற்கு பின் கருப்பாக மாறிய எரிமலை ஏரி: இந்தோனேசியாவில் குழப்பத்தில் விஞ்ஞானிகள்!
PulseNews சுருக்கம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, அங்குள்ள 'சானோ ந்கோவாங்' (Sano Nggoang) ஏரியின் நிறம் கருப்பாக மாறியுள்ளது. ஏரியின் அடிவாரத்திலிருந்து கறுப்பு நிறத்திலான கரிமப் பொருட்கள் வெளியேறி கசிந்ததே இதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த திடீர் மாற்றத்தினால் ஏரியின் ஆழத்தில் என்ன நடக்கிறது என்ற பெரும் புவியியல் சந்தேகங்களும் விவாதங்களும் விஞ்ஞானிகள் மத்தியில் எழுந்துள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள இந்த விசித்திரமான நிகழ்வு ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology