மனிதர்களை மீட்க வரும் பூச்சி ரோபோக்கள்: 'பாராகார்ப்ஸ்' தொழில்நுட்பத்தின் புதிய மைல்கல்
இயற்கைப் பேரிடர்கள் மற்றும் நிலநடுக்கங்கள் நிகழும்போது, இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மனிதர்களை மீட்டெடுப்பது மீட்புக் குழுவினருக்கு மிகப்பெரிய சவாலாக அமைகிறது. குறுகிய மற்றும் ஆபத்தான இடங்களுக்குள் மனிதர்களோ அல்லது பெரிய இயந்திரங்களோ நுழைய முடியாத நிலையைத் தவிர்க்க, குயின்ஸ்லேந்து பல்கலைக்கழகம் (UQ) மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரி-ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். "பாராகார்ப்ஸ்" என்று அழைக்கப்படும் ஆறு கால்களைக் கொண்ட பெரிய கரப்பான்பூச்சிகளை, சிறு மருத்துவ உதவி வழங்கி தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் அளவுக்கு அவர்கள் வடிவமைத்துள்ளனர். வடக்கு குயின்ஸ்லேந்து பகுதியைச் சேர்ந்த 'மக்ரோபனேஸ்தியா ரைனோசரஸ்' என்ற பிரம்மாண்ட வகை கரப்பான்பூச்சிகளைப் பயன்படுத்தி இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் இயல்பான உடல் இயக்க வலிமையுடன், எடை குறைந்த மின்னணு சாதனங்கள், சிறிய கேமராக்கள் மற்றும் தொலைதூரத்திலிருந்து இயங்கக்கூடிய தானியங்கி மருத்துவ ஊசிகளைப் பொருத்தி நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டுப்படுத்துகின்றனர். இது வெறும் ஆபத்தான இடங்களைக் கண்டறியும் கருவிகளாக மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலுதவி அளிக்கும் சிறிய மீட்பாளராகவும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தில் மிகக் கடினமான சவாலாக இருந்தது, பூச்சியை இலக்கை நோக்கித் துல்லியமாக நகர்த்தி, மருந்தைச் செலுத்தும் வரை அதை ஒரே இடத்தில் நிலைநிறுத்துவதுதான் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், நடத்தப்பட்ட சோதனைகளில், 15 சென்டிமீட்டர் என்ற குறுகிய தூரத்தில் இந்த அமைப்பைப் பயன்படுத்தி 95 சதவீத வெற்றிகரமாக மருந்து செலுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தப் பாதையைக் கடந்து மருந்தைச் செலுத்தும் முழுமையான முயற்சியில் 72 சதவீத வெற்றி கிடைத்துள்ளது. ஆராய்ச்சியின் போது பூச்சிகளுக்கு மின்முனைகள் மற்றும் நுண் சில்லுகளைப் பொறுத்த மயக்க மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பணி முடிந்த பின் இந்தச் சாதனங்களைக் கழற்றிவிட்டால், அவை இயல்பான ஆயுட்காலத்துடன் வாழக்கூடியவை என்பதால் உடலியல் ரீதியாகப் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. பேரழிவு காலங்களில் இடிபாடுகள் அல்லது குகைகளுக்குள் சிக்குபவர்களுக்கு உடனடியாக மருத்துவர்களோ அல்லது மீட்புக் குழுவோ செல்ல முடியாத சூழலில், இந்தச் சிறு அமைப்புகள் உயிர் காக்கும் வரப்பிரசாதமாக அமையும். வரும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில், வெவ்வேறு பணிகளைச் செய்யக்கூடிய இத்தகைய பூச்சிகளின் கூட்டங்களை உண்மையான பேரிடர் மீட்புப் பணிகளில் பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். எதிர்காலத்தில் நகர்ப்புற மீட்புப் பணிகளில் இந்த தொழில்நுட்பம் ஒரு திருப்புமுனையாக அமையும் என அவசரகால மீட்புத்துறை அதிகாரிகளும் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

இயற்கைப் பேரிடர்கள் மற்றும் நிலநடுக்கங்களின் போது இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பது மீட்புக் குழுவினருக்கு பெரும் சவாலாக உள்ளது. குறுகிய மற்றும் ஆபத்தான இடங்களுக்குள் மனிதர்களோ அல்லது பெரிய இயந்திரங்களோ நுழைய முடியாத சிக்கலைத் தீர்க்க, குயின்ஸ்லேந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 'பாராகார்ப்ஸ்' என்று அழைக்கப்படும் ஆறு கால்களைக் கொண்ட ரோபோக்களை உயிரி-ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். பூச்சிகளின் அமைப்பைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், மீட்புப் பணிகளில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.