PulseNews
தொழில்நுட்பம்

68 பேரை பலிகொண்ட புளோரஸ் நிலநடுக்கம்... இப்போது சுமத்ராவிலும் நடுக்கம்: பீதியில் இந்தோனேசியா

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு கடற்பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக.18) 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 29 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது கடலோரப் பகுதிகளில் உணரப்பட்டாலும், உடனடியாக எவ்வித பெரிய சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் புளோரஸ் தீவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது சுமத்ராவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவில் 5.6 முதல் 6.1 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டது. சுமத்ராவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்பகுதியில் இந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. சாத்தியமான பின்-அதிர்வுகள் (Aftershocks) ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கடுமையான நடுக்கம் ஏற்பட்டால் குனிந்து, தலைக்குக் கவசம் அமைத்து, பாதுகாப்பான பொருளைப் பிடித்துக்கொள்ளும் (Drop, Cover and Hold On) பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆக.15 அன்று புளோரஸ் பகுதியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் வடுக்கள் இன்னும் மாறாத நிலையில், இந்த புதிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு நுசா தெங்காரா (East Nusa Tenggara) பகுதிகளை உலுக்கிய அந்த நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளனர்; 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து தவித்து வருகின்றனர். மேலும், அங்கு செவ்வாய்க்கிழமை வரை 2,100-க்கும் மேற்பட்ட பின்-அதிர்வுகள் பதிவாகியுள்ளன. உலகின் புவியியல் ரீதியாக மிகவும் தீவிரமான 'பசிபிக் நெருப்பு வளையம்' (Pacific Ring of Fire) பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இந்தத் தீவுக்கூட்டத்தின் அடியில் பல டெக்டோனிக் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் தீவிர புவியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்படுகின்றன. குறிப்பாக, முக்கிய புவித்தட்டு நகர்வுகள் சுமத்ரா தீவு வழியாக செல்வதால், இப்பகுதி நிலநடுக்கங்களால் எளிதில் பாதிக்கப்படும் இடமாக உள்ளது. M5.6 earthquake - 154 km SSE of Teluk Dalam, Indonesia Aug 18 13:02 local time (24m ago) Depth 10 km https://t.co/ufL9QFQl2Y pic.twitter.com/x0cGR4ZJBx — Earthquakes (@NewEarthquake) August 18, 2026 புளோரஸ் நிலநடுக்கத்தால் தான் சுமத்ரா நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. இவ்விரு நிகழ்வுகளும் நாட்டின் முற்றிலும் மாறுபட்ட இருவேறு பகுதிகளில் நடந்தன. ஒரே காலகட்டத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் நிகழ்ந்தாலும், ஒன்று மற்றொன்றை தூண்டியிருக்க வேண்டிய அவசியமில்லை. இவ்விரு நிலநடுக்கங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த விரிவான நில அதிர்வு தரவுகள் விஞ்ஞானிகளுக்குத் தேவைப்படுகின்றன. பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு, புவியோட்டின் கட்டமைப்பு தன்னைத்தானே சமநிலைப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடும். இதன் காரணமாகவே தொடர் பின்-அதிர்வுகள் ஏற்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சிறியதாக இருந்தாலும், சில அதிர்வுகள் ஏற்கனவே பலவீனமடைந்துள்ள கட்டிடங்களை மேலும் சேதப்படுத்தும் வலிமை கொண்டவை. குறிப்பாக, 7.7 ரிக்டர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வரும் புளோரஸ் பகுதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சுமத்ராவில் ஏற்பட்டுள்ள இந்நிலநடுக்கம், இந்த வாரத்தில் இந்தோனேசியாவில் நிலவும் தீவிர புவியியல் செயல்பாடுகள் வெளிப்படுத்துகிறது. அடுத்த நிலநடுக்கம் எப்போது, எங்கு ஏற்படும் என்பதை விஞ்ஞானிகளால் துல்லியமாகக் கணிக்க முடியாது. இருப்பினும், நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டட வடிவமைப்பு, அவசரகால தயார்நிலை மற்றும் விரைவான பேரிடர் மீட்புப் பணிகளின் அவசியத்தை இந்த தொடர் நிகழ்வுகள் மீண்டும் உணர்த்தியுள்ளன.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
68 பேரை பலிகொண்ட புளோரஸ் நிலநடுக்கம்... இப்போது சுமத்ராவிலும் நடுக்கம்: பீதியில் இந்தோனேசியா
PulseNews சுருக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு கடற்பகுதியில் செவ்வாய்க்கிழமை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடலுக்கு அடியில் 29 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கம் கடற்கரை பகுதிகளில் உணரப்பட்டாலும், தற்போதைய நிலவரப்படி பெரிய அளவிலான சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. ஏற்கனவே புளோரஸ் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 68 பேர் உயிரிழந்த நிலையில், சுமத்ராவில் ஏற்பட்டுள்ள இந்த புதிய நிலநடுக்கம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology