PulseNews
தொழில்நுட்பம்

"நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய பாதுகாப்பு வழிமுறைகள்!": உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

நீட் தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தடுத்துத் தேர்வை மேம்படுத்தவும் கோரி அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்கப் புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாட்டு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். புதிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை முற்றிலும் தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள்: 4 விதமான வினாத்தாள்கள்: நீட் தேர்விற்கு மொத்தம் 4 விதமான வினாத்தாள்கள் தயாரிக்கப்படும். தேசிய தேர்வுகள் முகமை நடவடிக்கை: தேசிய தேர்வுகள் முகமையின் (NTA) இயக்குநர், தயாரிக்கப்பட்ட 4 வினாத்தாள்களில் இருந்து 2 வினாத்தாள்களைத் தேர்ந்தெடுப்பார். இரு வேறு அச்சகங்கள்: தேர்ந்தெடுக்கப்பட்ட 2 வினாத்தாள்களும் முற்றிலும் ரகசியமாக இரு வேறு அச்சகங்களுக்கு அச்சிடுவதற்காக அனுப்பி வைக்கப்படும். வீடியோ கண்காணிப்பு & ஆயுதப் படை பாதுகாப்பு: வினாத்தாள் தயாரிப்பு மற்றும் விநியோகம் வரையிலான அனைத்து நடவடிக்கைகளும் காணொளி (Video) பதிவு மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். மேலும், தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் அனைத்தும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். உச்ச நீதிமன்றத்தின் அதிருப்தியும் உத்தரவும் மத்திய அரசு சமர்ப்பித்த இப் புதிய பாதுகாப்பு வழிமுறைகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முழுமையாகத் திருப்தி அடையவில்லை. ராதாகிருஷ்ணன் குழு பரிந்துரைகள்: நீட் தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விளக்கத்தைக் நீதிபதிகள் கோரினர். பிரமாணப் பத்திரத்திற்கு உத்தரவு: இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் விரிவான பிரமாணப் பத்திரத்தை (Affidavit) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 3 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.

Seithipunal14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
"நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய பாதுகாப்பு வழிமுறைகள்!": உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!
PulseNews சுருக்கம்

நீட் தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், முறைகேடுகளைத் தடுக்கவும் அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா விளக்கம் அளித்தார்.

நீட் வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களைத் தடுக்க புதிய மற்றும் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த புதிய கட்டுப்பாடுகள் தேர்வு முறையை மேம்படுத்தும் வகையில் அமையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology