இந்த தவறை மட்டும் செஞ்சுடாதீங்க.. பொது WiFi பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை!
பொது WiFi அபாய எச்சரிக்கை: விமான நிலையம், உணவகம் போன்ற இடங்களில் இலவச WiFi-யில் ஆன்லைன் வங்கி, ஷாப்பிங், பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது. Public WiFi security alert: CERT-In warns users to avoid online banking, shopping and financial transactions on unsecured free WiFi in airports, restaurants and other public places.

விமான நிலையங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களில் கிடைக்கும் இலவச வைஃபை (WiFi) வசதியை பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய கணினி அவசர கால நடவடிக்கை குழு (CERT-In) அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய பாதுகாப்பற்ற பொது வைஃபை இணைப்புகளை பயன்படுத்தி ஆன்லைன் வங்கிச் சேவைகள், ஷாப்பிங் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது வைஃபை வலையமைப்புகள் ஹேக்கிங் செய்யப்பட வாய்ப்புள்ளதால், பயனர்கள் தங்களின் தனிப்பட்ட நிதித் தகவல்களைப் பகிரும் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பற்ற பொது இணையதள இணைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி நடவடிக்கைகள் சைபர் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.