அரசு மருத்துவமனைகளில் இனி நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை.. ஆன்லைன் அப்பாயின்ட்மென்ட், AI சாட்பாட் வசதி விரைவில் அறிமுகம்!!
Online Appointment System AI Chatbot: தமிழக அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று காத்திருப்பதைத் தவிர்க்க AI சாட்பாட் மற்றும் ஆன்லைன் முன்அனுமதி வசதிகள் விரைவில் கொண்டு வரப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளைத் தூய்மையாகவும், நோயாளிகளை மரியாதையுடனும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க, ஆன்லைன் முன்பதிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட் வசதிகளை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வசதிகள் மூலம் நோயாளிகளுக்குச் சிறப்பான சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், அரசு மருத்துவமனைகளைத் தூய்மையாகப் பராமரிக்கவும், அங்கு வரும் நோயாளிகளிடம் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ளவும் மருத்துவமனை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.