PulseNews
தொழில்நுட்பம்

திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!

<p style="text-align: justify;"><strong>Airtel Discontinues Popular Prepaid Plans:</strong> இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் பல பிரபல ரீசார்ஜ் திட்டங்களை அதிரடியாக நீக்கியுள்ளது. சமீபகாலமாகவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவை சேட்டனைகளை (ARPU) உயர்த்தும் நோக்கில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனம் தற்போது எடுத்துள்ள இந்த நடவடிக்கை எளிய மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p> <h3 style="text-align: justify;">நீக்கப்பட்ட முக்கிய ரீசார்ஜ் திட்டங்கள்</h3> <p style="text-align: justify;">ஏர்டெல் வாடிக்கையாளர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த குறைந்த விலை மற்றும் நடுத்தர விலை ரீசார்ஜ் திட்டங்களான ரூ.299, ரூ.319, ரூ.579, ரூ.619, ரூ.649 மற்றும் ரூ.799 ஆகிய பிரீபெய்ட் திட்டங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனால், ரூ.299 திட்டத்தைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் இனி அடுத்த கட்ட திட்டங்களான ரூ.349 அல்லது ரூ.399 ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுமட்டுமன்றி, ஏற்கனவே நடைமுறையில் இருந்த ரூ.859 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தின் விலை நேரடியாக ரூ.899 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</p> <h3 style="text-align: justify;">வாடிக்கையாளர்கள் சந்திக்கும் சிரமங்கள்</h3> <p style="text-align: justify;">திடீரென மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விலையேற்றமும் திட்டங்கள் நீக்கமும் மாதந்திர பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பயனீட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறைந்த கட்டணத்தில் டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புச் சலுகைகளைப் பெற்று வந்த பயனர்களுக்கு இந்த மாற்றம் கூடுதல் நிதிப் சுமையை அளித்துள்ளது. நிறுவனத்தின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையால், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பலர் தங்களது சேவைகளைத் தொடர்வதில் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.</p> Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
PulseNews சுருக்கம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், தனது பிரபலமான பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அதிரடியாக நீக்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் சேவை வருவாயை (ARPU) அதிகரிக்கும் நோக்கில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீபகாலமாக பல்வேறு கட்டண மாற்றங்களைச் செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகவே ஏர்டெல் நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology