காலம் மாறி போச்சு... இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கும் ஒரு எல்லை இருக்கு! ட்ரெண்ட் ஆகணும்ன்னு இப்படியா பண்றது? கொந்தளிக்கும் நெட்டிசென்கள்..!!!
காலத்துக்கு ஏற்ப கலாச்சாரமும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமும் மாறி வருகிறது. முன்பு கர்ப்பம் என்பது குடும்பத்தினருக்குள் மட்டுமே பகிரப்பட்ட முக்கியமான நிகழ்வாக இருந்தது. ஆனால், டிஜிட்டல் யுகத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்வது இயல்பாகிவிட்டது. குடும்பத்துக்குள் இருந்த கர்ப்ப செய்தி ஒரு காலத்தில் கர்ப்பத்தை புனிதமானதும் தனிப்பட்டதுமான விஷயமாகவே பல குடும்பங்கள் பார்த்தன. கண் திருஷ்டி படக்கூடாது என்பதற்காக நெருங்கிய உறவினர்களிடம் மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெண்களும் தங்களது கர்ப்ப கால அனுபவங்களை வெளியில் அதிகம் பகிராமல் அமைதியாக கடந்து வந்தனர். இதையும் படிங்க: கிடுகிடுவென உயரும் சர்க்கரை விலை.. E20 பெட்ரோலால் தான் சர்க்கரை விலை உயர்ந்ததா? மத்திய அரசு விளக்கம்..! ரீல்ஸ் முதல் போட்டோஷூட் வரை புதிய டிரெண்ட் இப்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. குறிப்பாக, பல ஆண்டுகள் காத்திருந்து குழந்தையை எதிர்பார்க்கும் தம்பதிகள், அந்த மகிழ்ச்சியை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மட்டுமின்றி சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்கிறார்கள். Pregnancy Announcement என்ற பெயரில் போட்டோஷூட், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், நடன வீடியோக்கள் என கர்ப்ப செய்தியை அறிவிப்பது தனி டிரெண்டாகவே உருவாகியுள்ளது. தங்களது வாழ்க்கையில் கிடைத்த முக்கியமான தருணத்தை பதிவு செய்து வைத்துக் கொள்வதும், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதே நேரத்தில், தனிப்பட்ட வாழ்க்கையின் எல்லைகள் எங்கு முடிகின்றன என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. பிரசவத்துக்கும் ஒரு எல்லை அவசியம் கர்ப்ப காலத்தை கொண்டாடுவதற்கும், அந்த அனுபவத்தைப் பகிர்வதற்கும் பல வழிகள் இருந்தாலும், பிரசவம் என்பது முற்றிலும் வேறுபட்ட மருத்துவ நிகழ்வு. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் முக்கியமான அந்த நேரத்தை முழுமையாக பொதுவெளியில் காட்ட வேண்டும் என்ற எண்ணம், சமூக வலைதள மோகம் எந்த அளவுக்கு சென்றுள்ளது என்ற கேள்வியை எழுப்புகிறது. கொண்டாட்டம் என்பது தவறல்ல. ஆனால், சோஷியல் மீடியா தனியுரிமை என்ற விஷயத்தில் ஒரு தெளிவான எல்லை இருப்பது அவசியம். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்கும், தனிப்பட்ட தருணங்களை முழுமையாக பொதுவெளிக்கு கொண்டு வருவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்வதே முக்கியம். இதையும் படிங்க: இறந்த மகனின் உடலை தோளில் சுமந்து கண்ணீரோடு நடந்த தந்தை! நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்!!!

கால மாற்றத்திற்கு ஏற்ப மக்களின் வாழ்க்கை முறையும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதங்களும் மாறியுள்ளன. ஒரு காலத்தில் குடும்பத்தினருக்குள் மட்டும் பகிரப்பட்டு, புனிதமான மற்றும் தனிப்பட்ட விஷயமாகக் கருதப்பட்ட கர்ப்ப செய்திகள், தற்போது டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்களில் பகிரப்படுவது சாதாரணமாகிவிட்டது.
முன்பு கண் திருஷ்டி பயத்தால் நெருங்கிய உறவினர்களிடம் மட்டுமே பகிரப்பட்ட இந்த தகவலை, இன்று சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களாகப் பகிர்வதை பல நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காக எல்லையை மீறிச் செயல்படுவதாகக் கூறி மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.