PulseNews
தொழில்நுட்பம்

15 ஆண்டுகளுக்குப் பின் ஓகே சொன்ன ரயில்வே வாரியம்! இனி சென்னை மெட்ரோ வசமாகும் பறக்கும் ரயில்!

<p style="text-align: justify;">சென்னை மாநகரப் போக்குவரத்து வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக, பறக்கும் ரயில் (MRTS) சேவையைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் (CMRL) இணைப்பதற்கான சென்னை தெற்கு ரயில்வேயின் கோரிக்கைக்கு மத்திய ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம், சுமார் 15 ஆண்டுகாலமாக நீடித்து வந்த நீண்ட காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த வரைவுத் திட்டமும் அதிகாரப்பூர்வமாகச் கையெழுத்தாகியுள்ளது.</p> <p style="text-align: justify;">தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளருக்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் பாதையின் பராமரிப்பு, சொத்துக்கள் மற்றும் பொது நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தும் சென்னை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு தமிழக அரசால் இதற்கான முதற்கட்ட நகர்வுகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முடிவு முழு வடிவம் பெற்றுள்ளது.</p> <h3 style="text-align: justify;">இரண்டு ஆண்டுகள் இடைக்கால மாற்றம் மற்றும் புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள்</h3> <p style="text-align: justify;">இந்த இணைப்பு திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக அடுத்த 90 நாட்களுக்குள் நிலையங்களின் பராமரிப்பு, பொது நிர்வாகப் பொறுப்புகள் ஆகியவை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். ரயில் இயக்கம் மற்றும் சிக்னல் அமைப்புகளை முழுமையாக மெட்ரோ நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு இரண்டு ஆண்டுகள் இடைக்கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. </p> <p style="text-align: justify;">இந்த இரண்டு ஆண்டு கால அவகாசத்திற்குள், பறக்கும் ரயிலின் 19 ரயில் நிலையங்கள், மின்சார ரயில்கள் (EMU), சிக்னல் அமைப்புகள், உயர்த்தப்பட்ட பாதைகள் மற்றும் நிலப் பகுதிகள் அனைத்தும் மெட்ரோ நிர்வாகத்திற்கு மாற்றப்படும். மேலும், சென்னை கடற்கரை மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் சில உள்கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. </p> <p style="text-align: justify;">சென்னை கடற்கரை நிலையத்தில் பறக்கும் ரயில் சேவைக்காக 9 மற்றும் 10 ஆகிய இரு பிளாட்பாரங்கள் பிரத்யேகமாக ஒதுக்கப்படவுள்ளன. கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் தடையின்றி ரயில்களை மாற்றிப் பயணிக்கும் வகையில் புதிய இணைப்புகளைத் தமிழக அரசு உருவாக்கவுள்ளது. இந்த முழு இணைப்பு பணிகளையும் சிறப்பாகக் கண்காணித்து ஒருங்கிணைக்கச் சென்னை ஒருங்கிணைந்த நகர்ப்புற போக்குவரத்து அதிகார அமைப்பின் (CUMTA) ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிகாரிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.</p> <h3 style="text-align: justify;">பயணிகள் சந்திக்கும் புதிய மாற்றங்கள் மற்றும் பலன்கள்</h3> <p style="text-align: justify;">இந்த இணைப்பின் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், வழக்கமான மெட்ரோ ரயில்களுடன் பறக்கும் ரயிலையும் இணைத்து ஒரே அமைப்பாக இயக்கும். இதன் மூலம் ரயில் நிலையங்களின் சுத்தம், பாதுகாப்பு, மின் தூக்கிகள் (Lifts), நகரும் படிகட்டுகள் (Escalators) மற்றும் பயணிகளுக்கான நவீன வசதிகள் மெட்ரோ தரத்திற்கு உயர்த்தப்படும்.</p> <p style="text-align: justify;">இருப்பினும், இந்த இணைப்பின் காரணமாக ஒரு சில பழைய சேவைகளில் மாற்றங்கள் ஏற்படும். முன்பு வேளச்சேரியிலிருந்து சென்னை கடற்கரை வழியாக அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்பட்ட நேரடி புறநகர் ரயில் சேவைகள் இனி முழுமையாக நிறுத்தப்படும். இனி பறக்கும் ரயில் பாதை முழுவதும் மெட்ரோவின் தனித்துவமான நகர்ப்புற போக்குவரத்து அமைப்பாக மட்டுமே செயல்படும் என்பதால், பயணிகள் இந்த நவீன மாற்றங்களை விரைவில் அனுபவிக்க முடியும்.</p>

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
15 ஆண்டுகளுக்குப் பின் ஓகே சொன்ன ரயில்வே வாரியம்! இனி சென்னை மெட்ரோ வசமாகும் பறக்கும் ரயில்!
PulseNews சுருக்கம்

சென்னை மாநகரப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக, பறக்கும் ரயில் (MRTS) சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த கோரிக்கைக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அனுமதி கிடைத்துள்ளது.

இந்த இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த வரைவுத் திட்டமும் தயாராகி வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவின் மூலம் சென்னை பொதுப் போக்குவரத்தில் புதிய மாற்றம் ஏற்பட உள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology