இந்த மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்!!
Weather Update: தமிழகத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதால், இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 37°C வரை உயர வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக, இன்று முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், வெப்பநிலையானது அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.