வாகன இறக்கமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
மத்திய கிழக்கில் நிலவிவரும் மோதல் சூழல் முடிவுக்கு வந்தவுடன், வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார். இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மோட்டார் பேரணி 2026 வாகனக் கண்காட்சியில் கலந்துகொண்டபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முதன்மை நோக்கம் p...

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் முடிவுக்கு வந்ததும், வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள தற்காலிகக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் உறுதி அளித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற 'மோட்டார் பேரணி 2026' வாகனக் கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான விஜித ஹேரத், இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் பங்கேற்று இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.