பாகிஸ்தான் - 5 சிறுவர்களின் உயிரைக் குடித்த கார் பந்தயம்
பாகிஸ்தான் லாகூர் கார் பந்தய விபத்து: ஹார்பன்ஸ்புரா கால்வாய் சாலையில் அதிவேக கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி நொறுங்கி, காரில் இருந்த 3 சிறுவர்கள் மற்றும் சாலையில் நடந்த 2 சிறுவர்கள் உட்பட 5 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த துயர சம்பவம். Pakistan Lahore car racing tragedy: High-speed car loses control on Harbanspura canal road, crashes into tree, killing 5 boys including 3 in the car and 2 pedestrians on the spot, sparking police probe into dangerous weekend street races.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள ஹார்பன்ஸ்புரா கால்வாய் சாலையில், கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 3 சிறுவர்கள் மற்றும் சாலையில் நடந்து சென்ற 2 சிறுவர்கள் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வார இறுதி நாட்களில் நடைபெறும் இத்தகைய அபாயகரமான கார் பந்தயங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.