கடலில் நீராடிய பெண் மற்றும் சிறுவர்கள் மூவர் மாயம்
கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினருள் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். குறித்த சம்பவம் பமுணுகம - எபாமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல்போனவர்கள் 35 வயதுடைய பெண், 04 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 13 வயதுடைய ஒரு சிறுவன் ஆவர். இவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பமுணுகம, எபாமுல்ல கடற்கரை பகுதியில் நீராடிக்கொண்டிருந்த ஒரு பெண் மற்றும் மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 35 வயதுடைய பெண்ணும், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகளும், 13 வயதுடைய சிறுவன் ஒருவருமே இவ்வாறு மாயமாகியுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.