PulseNews
தமிழகம்

Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

<p>டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த நிகழ்வை ஆயிரக்கணக்கானோர் நேரில் கண்டு களித்தனர். </p> <h2><strong>80வது சுதந்திர தின விழா</strong></h2> <p>நாடு முழுவதும் இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார். சுதந்திர தின கொண்டாட்டத்தில் ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி கலாச்சார பாணியில் அவர் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்திருந்தார். இப்படி வண்ண தலைப்பாகை அணிவது பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், இந்தியாவின் வளமான கலாச்சாரப் பன்முகத்தன்மையின் அடையாளமாகவும் திகழ்கிறது.</p> <p>இந்த நிகழ்வில் 150 ஆண்டுகால சிறப்பை கொண்டாடும் வகையில் முதல்முறையாக தேசிய கீதம் ஒலிபரப்பப்படுவதற்கு முன் வந்தே மாதரம் பாடல் சைக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். </p> <p><iframe title="Vaigaiselvan Interview | அதிமுக பற்றிய கேள்வி..ON Camera - வில் கண்ணீர் வைகைச்செல்வன் Emotional !" src="https://www.youtube.com/embed/FNY-luRFZIQ" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <h2><strong>பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி</strong></h2> <p>அப்போது, “சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக செங்கோட்டையிலிருந்து வந்தே மாதரம் ஒலிப்பதாக பெருமையுடன் கூறிய பிரதமர் மோடி, இந்தியா ஒரு வளர்ந்த தேசம். அதனால் பெரிய கனவுகளைக் காணுங்கள், மிகப்பெரிய அளவில் உறுதிமொழிகளை எடுங்கள் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும் பெரிய கனவுகள் மக்களின் சிந்தனையை விரிவுபடுத்தி, அவர்களின் பார்வையைத் தெளிவுபடுத்தும். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு வளர்ந்த நாடாக மாறும்போது, ​​உலகம் இந்தியாவை வேறு விதமாகப் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும். </p> <p>கடந்த 12 ஆண்டுகளில்பாதுகாப்பு உற்பத்தி நான்கு மடங்காகவும், காதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஐந்து மடங்காகவும், மின்னணு உற்பத்தி ஏழு மடங்காகவும் அதிகரித்துள்ளது. மேலும் கைபேசி உற்பத்தி 33% அதிகரித்துள்ளதாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 100% வளர்ச்சி கண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.</p> <p>இன்று நாம் அனைவரும் 80வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். இன்று, வந்தே மாதரம் என்ற முழக்கம் ஒவ்வொரு இதயத்திலும் ஒலிக்கிறது. இன்று, மூவர்ணக் கொடி ஒவ்வொரு வீட்டிலும் பறக்கிறது, ஒவ்வொரு மனதிலும் குடிகொண்டிருக்கிறது; தேசம் புதிய தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு, உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் முன்னோக்கிச் செல்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் எண்ணற்ற குடிமக்கள் அனைவரும், அசைக்க முடியாத உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும், தேசத்தை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல தங்களால் இயன்ற எல்லா வழிகளிலும் பாடுபட்டுள்ளனர். இந்த முயற்சிகளை நான் மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.</p> <p>நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பற்றி பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மேலும் அணுமின் நிலையங்களை அமைக்க வேண்டும் என கூறினார். </p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/spiritual/what-happens-if-you-keep-a-lemon-under-the-pillow-271057" width="631" height="381" scrolling="no"></iframe></p> Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
PulseNews சுருக்கம்

டெல்லியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். செங்கோட்டையில் நடந்த இந்த நிகழ்வில் முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காக அதிக அளவில் அணுமின் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது உரையில் வலியுறுத்தினார். இந்தியா முற்றிலும் மாறுபட்ட நிலையை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu