பள்ளி வளாகத்தில் பாதுகாப்பின்மை? மின்சாரம் தாக்கி 6-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் குப்பிச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில், 11 வயதான யோகேஷ் என்ற சிறுவன் ஆறாம் வகுப்பு பயின்று வந்தான். வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற அம்மாணவன், மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்திற்குள் நடந்து சென்று கொண்டிருந்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக, அங்கு தரையில் அறுந்து விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை யோகேஷ் மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உடனடியாக அவன் மீது மின்சாரம் பாய்ந்து, பலத்த காயங்களுடன் தூக்கி வீசப்பட்டான். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அவனை மீட்டு, அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்தினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் குப்பிச்சிபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்த யோகேஷ் என்ற 11 வயது மாணவன், மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் நடந்து சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததால், அவன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டான்.
பள்ளி வளாகத்தில் போதிய பாதுகாப்பின்மை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அந்த ஆறாம் வகுப்பு மாணவன், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.