உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !
<p>உசிலம்பட்டி அருகே அரசு பள்ளி மாணவ மாணவிகளின் காலணிகள் புதரில் வீசப்பட்ட சம்பவம் - அரசு உதவி பெறும் தனியார் பள்ளி தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு.</p> <div dir="auto"><strong>5 ஆயிரத்திற்கும் அதிகமான காலணிகள்</strong></div> <div dir="auto"> </div> <div dir="auto">மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர், வடுகபட்டி, பூதிப்புரம் பகுதிகளில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த 2019 - 20 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமான காலணிகளை புதர் மற்றும் ஊரணி பகுதியில் குப்பை போல, வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உசிலம்பட்டியில் இயங்கி வரும் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வழங்கியது போக இருப்பு வைக்கப்பட்டிருந்த காலணிகளை பள்ளி தலைமையாசிரியர் பரமசிவம், மேல் அலுவலர்களின் உத்தரவின்றி, புதர் மற்றும் ஊரணி பகுதியில் வீசி சென்றது தெரியவந்துள்ளது.</div> <div dir="auto"> </div> <div dir="auto"><strong>அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர் பரமசிவத்தை தற்காலிக பணியிடை நீக்கம் </strong></div> <div dir="auto"> </div> <div dir="auto">அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர் பரமசிவத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். மாணவ மாணவிகளுக்கு வழங்கிய பொருட்களை பள்ளி தலைமையாசிரியரே குப்பை போல புதர் பகுதியில் வீசிய சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</div>

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர், வடுகபட்டி மற்றும் பூதிப்புரம் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2019-2020 கல்வியாண்டில் வழங்கப்பட்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமான காலணிகள் புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி தலைமையாசிரியரை, மாவட்ட கல்வி அலுவலர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.