கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்து! காணாமல் போன மாலுமி
மொரட்டுவை, அங்குலானை கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில், அதில் இருந்த 12 கடற்படை வீரர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அங்குலானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வழக்கமான ரோந்துப் பணியை முடித்துவிட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கடலில் இருந்து புகை எழுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்குலானை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். ...

மொரட்டுவை, அங்குலானை கடற்கரையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கடற்படைக்குச் சொந்தமான அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துள்ளது. வழக்கமான ரோந்துப் பணியை முடித்துக்கொண்டு கொழும்பு நோக்கித் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இப்படகில் பயணம் செய்த 12 கடற்படை வீரர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அங்குலானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடலில் இருந்து புகை வருவதைக் கவனித்த அப்பகுதி மக்கள், இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.