பயாகல துப்பாக்கிச்சூடு - தடயங்களை அழிக்க பைக்கிற்குத் தீ
பயாகலஇ கொஸ்ஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள், இன்று (01) காலை தொடங்கொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட எலதூவ பகுதியிலுள்ள இறப்பர் தோட்டமொன்றில் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தொடங்கொட காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று (31) இரவு பயாகல பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து நாகொட...

பயாகலவின் கொஸ்ஹேன பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. தெதொங்கொட காவல் பிரிவிற்கு உட்பட்ட எலதூவ பகுதியிலுள்ள ரப்பர் தோட்டம் ஒன்றில், குறித்த மோட்டார் சைக்கிள் தீயிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பயாகலவில் வீடொன்றிற்கு முன்னால் நேற்றிரவு நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெதொங்கொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.