உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : இன்று முதல் சாட்சியங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, இன்று (17) முதல் பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை அழைக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்ததை அடுத்து, 24 பிரதிவாதிகளுக்கும் எதிராகச் சாட்சியங்களை அழைக்கப் போதுமான காரணங்கள் உள்ளதாக நீதிபதிகள் குழாம் தீர்மானித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட...

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில், 24 பிரதிவாதிகளுக்கு எதிராகச் சாட்சியங்களைச் சமர்ப்பிக்குமாறு நிரந்தர மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்த நிலையில், பிரதிவாதிகளுக்கு எதிராகச் சாட்சியங்களை அழைக்கப் போதிய காரணங்கள் உள்ளதாக நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தின்படி, இன்றைய தினம் (17) முதல் பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.