யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல் - பின்னணியில் அரசியல் அழுத்தம்.! NPP உறுப்பினருக்கு உடனடி பிணை
ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டுப் பொருள்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரை நீதிமன்றில் முன்னியாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வீடு புகுந்து அச்சுறுத்தி பொருட்களுக்கு சேதம் விளைவித்த ஒருவருக்கு காவல்துறையினரால் பிணை வழங்க முடியாது என்றும் காவல்துறை பிணை வழங்கியது அரசியல் அழுத்தம் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி பிரதேச சபை உறுப்பினர் கணேசரூப...

ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பொருட்கள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசியல் அழுத்தம் காரணமாகவே காவல்துறையினரால் சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக, பெயர் குறிப்பிட விரும்பாத காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வீடு புகுந்து அச்சுறுத்தி சேதம் விளைவித்த ஒருவருக்கு காவல் நிலைய பிணை வழங்கப்பட்டமை குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. இதில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி பிரதேச சபை உறுப்பினர் கணேசரூபன் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளார்.