PulseNews
தமிழகம்

'மனித உயிர்கள் குறித்த மதிப்பு இல்லாமல் நிகழ்ந்த கொடூரம்'-மு.க.ஸ்டாலின் கண்டனம்

கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவர் வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதற்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது. மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'மனித உயிர்கள் குறித்த மதிப்பு இல்லாமல் நிகழ்ந்த கொடூரம்'-மு.க.ஸ்டாலின் கண்டனம்
PulseNews சுருக்கம்

கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் செயலுக்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

மனித உயிர்கள் மீது எந்தவித மதிப்பும் இன்றி இந்த அநியாயமான படுகொலை நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள ஸ்டாலின், இந்தச் சம்பவத்திற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu