முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி விபத்தில் உயிரிழப்பு
முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அவர்களுக்குச் சொந்தமான, புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்தே அவர் தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை (19) அவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாய் 55 வயதுடைய தேஷானி குணரத்ன என்...

முன்னாள் அமைச்சரும், மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவியான 55 வயதுடைய தேஷானி குணரத்ன, விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். இவர்களுக்குச் சொந்தமான புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் அவர் காயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று (19) காலை உயிரிழந்தார். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி விழுந்ததாலேயே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.