வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியிடம் 44 கிராம் நகைள் பறிப்பு..!
தென்காசி கடையநல்லூர் அருகே, ஓட்டைப் பிரித்து வீட்டுக்குள் இறங்கி மூதாட்டியிடம் 44 கிராம் தங்க நகைகளை பறித்த வழக்கில், பக்கத்து வீட்டில் வசித்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் இருந்த தோப்பில் ஆரஞ்சு நிற பைக் ஒன்று கேட்பாரின்றி இருப்பதை கவனித்த போலீசார், நம்பர் பிளேட்டை வைத்து கோகுல கண்ணன் என்பவரை சென்னையில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசித்துவரும் வேலம்மாள் என்பவர், தன் ஆண் நண்பரான சுரேஷ் மூலம் திருட்டை அரங்கேற்றியது தெரியவந்தது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே புகுந்து 44 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில், மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த வேலம்மாள் மற்றும் அவரது ஆண் நண்பர் சுரேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் கேட்பாரற்று நின்ற ஆரஞ்சு நிற இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு நடத்திய விசாரணையில், சென்னையில் இருந்த கோகுல கண்ணன் என்பவரை போலீசார் முதலில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் மூலமே, வேலம்மாள் மற்றும் சுரேஷ் ஆகியோரின் இந்த திருட்டுச் செயல் அம்பலமானது.