Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
<p>சட்டப்பேரவையில் மின்சாரத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றபோது அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாருக்கும், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p> <p>சட்டப்பேரவையில் இன்று நீதி, சிறை,சட்டம், எரிசக்தி, அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்சாரத்துறை <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> ஆட்சியில் சரிவர நிர்வகிக்கவில்லை. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், கடந்த 5 ஆண்டுகளில் மின்சார வாரியம் பட்ட பாடுகளை சொல்கிறேன் என ஆரம்பித்தார். அப்போது செந்தில் பாலாஜியை கரூர் கம்பெனி ஓனர் என சொல்லி விட்டு சாரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என குறிப்பிட்டார். </p> <p><iframe title="EPS OPS Funny | ”நாங்க மிசாவ பார்த்தவங்க” ENTRY கொடுத்த ஓபிஎஸ்.. குலுங்கி சிரித்த இபிஎஸ்" src="https://www.youtube.com/embed/en0tbaaSLEQ" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <p>இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “மாண்புமிகு சங்கி அமைச்சர்” என சிடிஆர் நிர்மல்குமாரை குறிப்பிட்டு விட்டு சாரி சாரி மன்னிக்கணும் என கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சிடிஆர் நிர்மல் குமார், எதிர்க்கட்சித்தலைவர் பாத்ரூமில் 3 மணி நேரம் இருந்ததாக சொல்ல எங்களுக்கு 5 நிமிடம் ஆகாது. எல்லாருக்கும் பேச தெரியும். தேவையில்லாத வார்த்தைகளை பேசினால் எங்களுக்கும் பேச தெரியும் என கூறினார். </p> <p>இதனால் மேலும் கடுப்பான <a title="உதயநிதி ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/udhayanidhi-stalin" data-type="interlinkingkeywords">உதயநிதி ஸ்டாலின்</a>, “தமிழ்நாட்டில் யார் யார் பாத்ரூமில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறார்கள் கண்காணிக்க ஒரு அமைச்சரை வைத்திருக்கிறீர்களா என நான் கேட்க விரும்புகிறேன்” என தெரிவித்தார். இதன்பின்னால் திமுக எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக கூச்சலிட்டபடி இருந்தனர். </p> <p>இதற்கு பதில் சொன்ன ஆதவ் அர்ஜூனா, நான் பேச வருவதை என்னவென்று எதிர்க்கட்சி கேட்கட்டும். அவர்களைப் போல நாங்களும் எழுந்திருந்தால் சட்டசபை நடக்காது” என பேசினார். இதற்கு பதில் சொன்ன உதயநிதி <a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a>, மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் <a title="செந்தில் பாலாஜி" href="https://tamil.abplive.com/topic/senthil-balaji" data-type="interlinkingkeywords">செந்தில் பாலாஜி</a> புள்ளி விவரத்தோடு கேள்வி எழுப்பினார். யார் முதலில் தவறாக பேசினார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அவையெல்லாம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என சொல்ல சபாநாயகர் அமைச்சர் பேசும்போதே நீக்கி விட்டேன் என சொன்னார். </p> <p>இதனையடுத்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், திமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் 4 அமைச்சர்கள் இருந்தனர். அதில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆட்கள் வேலைக்கு எடுப்பதில் குழப்பம் நிலவியது. 15 ஆயிரம் பேர் ஓய்வு பெற்ற நிலையில் வெறும் 343 பேர் மட்டுமே பணிக்கு எடுத்துள்ளனர். நிர்வாக அளவில் மாற்றம் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார். இதனால் சட்டப்பேரவை களேபரமாக மாறியது. </p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/does-eating-tamil-nadu-ration-rice-help-reduce-blood-sugar-levels-271812" width="631" height="381" scrolling="no"></iframe></p>

சட்டப்பேரவையில் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது அமைச்சர் சி.டி.ஆர் மற்றும் நிர்மல் குமாருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அவை நடவடிக்கைகளில் பரபரப்பை உண்டாக்கியது.
இந்த விவாதத்தின்போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை குறித்துப் பேசினார். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் மற்றும் நிர்மல் குமார் ஆகியோருக்கு இடையே எழுந்த மோதல், சட்டப்பேரவையில் திமுக மற்றும் தவெக இடையே அதிகாரப்பூர்வமற்ற கருத்து மோதல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.