24 பெட்டிகளுடன் சென்னையில் ரெடியாகும் 50 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்! பயணிகளுக்கு செம சர்ப்ரைஸ்
Oneindia Tamil14 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →இந்தியாவில் தற்போது ஒரே ஒரு வழித்தடத்தில் மட்டுமே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீண்ட தூர மற்றும் இரவு நேரப் பயணங்களுக்காக கூடுதலாக 50 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களைத் தயாரிக்க சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF) முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி தயாரிக்கப்படவுள்ள ஒவ்வொரு ரயிலும் 24 பெட்டிகளைக் கொண்டிருக்கும். இந்த புதிய ரயில்கள் மூலம் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
#tamilnadu