நெய்வேலி அருகே முந்திரிக்காட்டில் பதுங்கியிருந்த ரவுடி சுற்றிவளைப்பு..!
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை காவல்துறையினர் காலில் சுட்டுப்பிடித்தனர். கடந்த 16ஆம் தேதி இரு ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நரேஷ் என்பவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ரவுடி கோபி கோஷ்டியைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 28 வழக்குகளில் தொடர்புடைய கோபியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். புலவன்குப்பம் பகுதியில் உள்ள முந்திரிக் காட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்குசென்ற போலீசாரை அரிவாளால் தாக்கியுள்ளார். இதையடுத்து காவல் ஆய்வாளர் செந்தில் உடனடியாக ரவுடி கோபியை காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். காயம் அடைந்த அவரும், காவலர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி கோபியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கடந்த 16-ஆம் தேதி இரு தரப்பு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நரேஷ் என்பவர் கொல்லப்பட்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய கோபியை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
புலவன்குப்பம் பகுதியில் உள்ள முந்திரிக் காட்டில் கோபி பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவலர்களை, அவர் அரிவாளால் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் தற்காப்புக்காக காவல்துறையினர் கோபியின் காலில் சுட்டுப் பிடித்தனர்; இவ்வழக்கில் ஏற்கெனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.