IND vs SL: மானவ் சுதார் செய்தது தவறா? அம்பயரிடம் இலங்கை கேப்டன் புகார்! என்ன நடந்தது?
Sri Lankan captain Dhananjaya de Silva: இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில், மானவ் சுதார் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ஒரு ரன் எடுப்பதற்காக ஓடினார். ஆனால், இந்த ரன்னை எடுக்கும்போது, அவர் பிட்ச்சின் நடு பகுதிக்குள் ஓடினார். அவரது இந்தச் செயலைக் கண்ட இலங்கை கேப்டன் தனஞ்சய் டி சில்வா, நேராக பாகிஸ்தான் நடுவர் எஹ்சான் ரஸாவிடம் சென்று மானவ் சுதார் குறித்துப் புகார் அளித்தார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, இந்திய வீரர் மானவ் சுதார் ரன் எடுப்பதற்காக ஓடிய விதம் குறித்து இலங்கை கேப்டன் தனஞ்சய் டி சில்வா நடுவரிடம் புகார் அளித்துள்ளார். இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸின் போது மானவ் சுதார் பிட்ச்சின் நடுப்பகுதியில் ஓடி ரன் எடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த செயலைக் கவனித்த இலங்கை கேப்டன், உடனடியாக களத்தில் இருந்த பாகிஸ்தான் நடுவர் எஹ்சான் ரஸாவிடம் சென்று இது தொடர்பாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.