PulseNews
விளையாட்டு

சென்னையில் உலகத் தரம் வாய்ந்த 'ஸ்போர்ட்ஸ் சிட்டி': ஆர்.பி.பி. இன்ஃப்ரா நிறுவனத்தின் ரூ.205.89 கோடி ஒப்பந்தம் ரத்து

சென்னை செம்மஞ்சேரியில் பிரம்மாண்டமாக அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த 'குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி' (Global Sports City) திட்டத்தில் திடீர் திருப்பமாக, ஆர்.பி.பி. இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த ரூ.205.89 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (SDAT) ரத்து செய்துள்ளது. தமிழ்நாட்டில் சர்வதேச தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், சென்னை செம்மஞ்சேரியில் 80-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 'குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி' அமைக்க அரசு திட்டமிட்டது. சர்வதேச அளவிலான கால்பந்து மைதானம், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், படகுப்போட்டி மற்றும் உட்புற விளையாட்டு அரங்குகள் போன்றவை இதில் இடம்பெறவிருந்தன. இந்த மெகா திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம், பிப்ரவரி 2026-ல் RPP இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது ஏன்? விளையாட்டுத் துறையை மேலும் விரிவுபடுத்தி, சர்வதேச அளவிலான பெரிய நிகழ்வுகளை நடத்தும் வகையில் இத்திட்டத்தை மிகப்பெரிய அளவில் மறுவடிவமைப்பு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகே இத்திட்டத்தின் அமைப்பை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதன் காரணமாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் RPP இன்ஃப்ரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த பணிக்கான ஆணையை (Work Order) அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டது. ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது குறித்து ஆர்.பி.பி. இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனம் பங்குச் சந்தைகளுக்கு அளித்த தகவலில், ”பணி ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, திட்டத்திற்காக முதற்கட்டப் பணிகளைத் தொடங்கி கணிசமான தொகையைச் செலவிட்டுள்ளோம். இந்த திடீர் ரத்தால் ஏற்பட்டுள்ள நிதித் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஒப்பந்த விதிகளின்படி தங்களுக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள் குறித்து பரிசீலித்து வருகிறோம்” என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அரசு இத்திட்டத்தை புதிய வடிவமைப்பில் மீண்டும் பெரிய அளவில் டெண்டர் மூலம் செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சென்னையில் உலகத் தரம் வாய்ந்த 'ஸ்போர்ட்ஸ் சிட்டி': ஆர்.பி.பி. இன்ஃப்ரா நிறுவனத்தின் ரூ.205.89 கோடி ஒப்பந்தம் ரத்து
PulseNews சுருக்கம்

சென்னை செம்மஞ்சேரியில் 80 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சர்வதேச தரத்திலான 'குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி' அமைப்பதற்கான திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இத்திட்டத்திற்காக ஆர்.பி.பி. இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த 205.89 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் திடீரென ரத்து செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் இந்த பிரம்மாண்டமான திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இத்திட்டத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports