PulseNews
விளையாட்டு

TNPL 2026 Match 17: ஷ்யாம் சுந்தரின் அதிரடி சதம்! திருச்சியிடம் வீழ்ந்த திருப்பூர்!

வணக்கம் கிரிக்கெட் ரசிகர்களே! TNPL 2026-ன் 17-வது போட்டியில் திண்டுக்கல் NPR காலேஜ் மைதானத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி அபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய திருச்சி அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. இருப்பினும், மூலைக்கு மூலை பந்தை சிதறடித்த S. ஷ்யாம் சுந்தர் 57 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்! K. ராஜ்குமார் 37 ரன்கள் எடுத்து உறுதுணையாக இருக்க, திருச்சி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை உயர்த்தியது.197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய திருப்பூர் அணிக்கு ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகள் சரிந்தன. ஆனால், மூச்சடைக்க வைக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்திய துஷார் ரஹேஜா, வெறும் 43 பந்துகளில் 8 பிரம்மாண்ட சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்து ஆட்டத்தை திருப்பூர் பக்கம் திருப்பினார். அவருக்குப் பக்கபலமாக பிரதோஷ் ரஞ்சன் பால் 44 ரன்கள் சேர்த்தார். 15-வது ஓவரில் துஷார் ரஹேஜா ஆட்டமிழந்ததும் போட்டியில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. திருச்சி பந்துவீச்சாளர் K. ஈஸ்வரன் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டத்தை திருச்சி பக்கம் திருப்பினார். அதிசயராஜ் டேவிட்சன் மற்றும் சஞ்சய் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த, திருப்பூர் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது! அதிரடி சதமடித்த S. ஷ்யாம் சுந்தர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.மேலும் பல TNPL மற்றும் கிரிக்கெட் செய்திகளுக்கு நம்ம சேனலை லைக், ஷேர் அண்ட் சப்ஸ்கிரைப் பண்ணுங்க!

Asianet News Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
TNPL 2026 Match 17: ஷ்யாம் சுந்தரின் அதிரடி சதம்! திருச்சியிடம் வீழ்ந்த திருப்பூர்!
PulseNews சுருக்கம்

TNPL 2026 தொடரின் 17-வது போட்டி திண்டுக்கல் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதிய நிலையில், 17 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த திருச்சி அணிக்கு ஆரம்பத்தில் சரிவு ஏற்பட்டாலும், ஷ்யாம் சுந்தர் 57 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் அதிரடி சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports