வெளிநாட்டு மண்ணில் 2,500 ரன்கள் குவிப்பு: தோனி சாதனையை முறியடித்தார் ரிஷப் பந்த்
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 63 ரன்கள் குவித்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் எம்.எஸ்.தோனி மற்றும் மார்க் பவுச்சரின் சாதனைகளை முறியடித்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 63 ரன்களை ரிஷப் பந்த் சேர்த்தார். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 2,500 ரன்களை அவர் கடந்துள்ளார்.
இந்த மைல்கல்லை எட்டியதன் வாயிலாக, வெளிநாட்டு மைதானங்களில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் எம்.எஸ்.தோனி மற்றும் மார்க் பவுச்சரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். தற்போது இந்தப் பட்டியலில் ரிஷப் பந்த் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.