'தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல், மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்'; மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்..!
தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல், 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா சட்டத்தை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்திமத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று முன்தினம் 'மகளிர் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம்' குறித்து ராகுல் காந்தி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது; இந்திய பெண்களின் ஆற்றல் முடக்கப்பட்டுள்ளது. அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களுக்கு கனவு காணவும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், பெண்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு நாடு நிச்சயம் வெற்றி பெற முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார். <blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">This seems to be a positive message from the Congress Party. There's a visible change of heart in Shri Rahul Gandhi Ji about the Women. Now, I hope Congress Party will support the Women's Reservation Bill unconditionally. <a href="https://t.co/nSzH2C6Orf">https://t.co/nSzH2C6Orf</a></p>— Kiren Rijiju (@KirenRijiju) <a href="https://x.com/KirenRijiju/status/2085931548281541009?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script> ராகுல் காந்தியின் இந்த வீடியோவை, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு டேக் செய்து, நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; ''இது காங்கிரஸ் கட்சியிடமிருந்து வரும் ஒரு நேர்மறையான செய்தியாகத் தெரிகிறது. பெண்கள் விஷயத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மனநிலையில் ஒரு தெளிவான மாற்றம் தெரிகிறது. இனி, காங்கிரஸ் கட்சி மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிபந்தனையின்றி ஆதரிக்கும் என்று நம்புகிறேன்.'' என பதிவிட்டிருந்தார். ஆனால், இந்தப் பதிவுக்கு ராகுல் காந்தி பதிலளிக்கும் வகையில் கூறியுள்ளதாவது; <blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">रिजिजू जी, संसदीय कार्य मंत्री होने के नाते आपसे बेहतर यह कौन जानता होगा - महिला आरक्षण विधेयक 2023 में ही सर्वसम्मति से पारित हो चुका है, कांग्रेस के पूर्ण समर्थन के साथ।<br><br>सवाल यह है कि तीन साल बाद भी वह लागू क्यों नहीं हुआ और अब आप उसे परिसीमन से बेवजह क्यों जोड़ना चाहते हैं?... <a href="https://t.co/1HeBna8v8L">https://t.co/1HeBna8v8L</a></p>— Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://x.com/RahulGandhi/status/2085959154972365019?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script> ''மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா 2023-ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஏற்கெனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருக்கும் உங்களுக்கு தெரிந்திருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால், 03 ஆண்டுகள் கடந்தும் அது ஏன் இன்னும் அமல்படுத்தப்படவில்லை? இப்போது ஏன் அதை தேவையற்ற வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைக்க விரும்புகிறீர்கள்? 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அப்படியே அமல்படுத்துங்கள். தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல், மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை, தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுடன் இணைக்காமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இந்தியப் பெண்களின் ஆற்றலும் கனவுகளும் முடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பெண்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத எந்த நாடும் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தியின் மனநிலையில் மாற்றம் தெரிவதாகவும், காங்கிரஸ் கட்சி இனி இந்த மசோதாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆதரவுடன் அந்த மசோதா ஏற்கனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். மேலும், மூன்று ஆண்டுகள் ஆகியும் மசோதாவை அமல்படுத்தாமல், ஏன் தொகுதி மறுவரையறையுடன் இணைக்க முயல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.