கோவை என்ன பாகிஸ்தானிலா உள்ளது? த.வெ.க-விற்கு மட்டும்தான் பேரணி செல்ல அனுமதியா? - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி | Independence Day Rally
Independence Day Rally : 'இந்த ஆட்சியில் திராவிடர் கழகம் பேரணி செல்லவும் அனுமதியில்லை, பாரதிய ஜனதா கட்சி பேரணி செல்லவும் அனுமதியில்லை... ஆளும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் பேரணி செல்ல மட்டும்தான் காவல்துறை அனுமதி தருமா? '
கோவை என்ன பாகிஸ்தானில் உள்ளதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளது. ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தினர் பேரணி செல்ல மட்டும் அனுமதி வழங்கும் காவல்துறை, திராவிடர் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஏன் அனுமதி மறுக்கிறது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சுதந்திர தினப் பேரணி தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது, இத்தகைய பாரபட்சமான நடைமுறை ஏன் என்று நீதிபதி சரமாரியாகக் கேள்வி கேட்டுள்ளார். தவெக-விற்கு மட்டும் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்படுவது குறித்து நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.