2029 பிரதமர் வேட்பாளர் விஜய் என்ற தகவல் வதந்தி: காங்கிரஸ் மூத்த தலைவர் விளக்கம்
தமிழகத்தில் நடிகர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்று நூறு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரை அடுத்த பிரதமராகப் பார்க்க விரும்புவதாகத் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 2029…
தமிழகத்தில் நடிகர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்று நூறு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரை அடுத்த பிரதமராகப் பார்க்க விரும்புவதாகத் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்து வரும் சூழலில், அவரது அரசியல் நகர்வுகள் தற்போது தேசிய அளவில் கவனம் பெற்று வருகின்றன.
தென்னிந்தியாவைத் தாண்டி வட மாநிலங்களிலும், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களிலும் விஜய்க்கு வலுவான ஆதரவு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், விஜய் பிரதமர் வேட்பாளர் என்ற தகவல் வெறும் வதந்தி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
எதிர்காலத் தேர்தல்கள் குறித்துத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ள அந்த காங்கிரஸ் மூத்த தலைவர், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ராகுல் காந்தியே தலைமை தாங்குவார் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.