சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி படுகொலை: கனிமொழி எம்.பி கடும் கண்டனம்
சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் (46) என்பவர், வண்ணாந்துறை பகுதியில் மர்ம நபர்களால் துரத்திச் செல்லப்பட்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தலைநகரில் நடந்த இந்த கொடூர…

சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் (46) என்பவர், வண்ணாந்துறை பகுதியில் மர்ம நபர்களால் துரத்திச் செல்லப்பட்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தலைநகரில் நடந்த இந்த கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படுகொலை குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தலைநகரமா அல்லது கொலைநகரமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளதோடு, மாநிலத்தின் தற்போதைய சூழலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டனர். அவர்கள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் பரணி, கார்த்திக், ஹரிஹரன், மணி மற்றும் நரேஷ் ஆகிய 5 முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.