மரண தண்டனையை ஏற்க முடியாது! ஆனால்...கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள தகவல்
கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி நூலின் 2267 ஆம் பத்தியின்படி மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, கடமையில் இருந்து தவறியதற்காக முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைகள் குறித்த தனது நிலைப்பாட்டை விளக்கும்போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். மரண தண்டனை மனித மாண்பை மீறுவதாகவும்...

கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி நூல் பிரிவு 2267-ன் படி, மரண தண்டனை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே கருதப்படுகிறது என்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். மரண தண்டனை என்பது மனித மாண்பை மீறும் செயல் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடாகும்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல் விவகாரத்தில், கடமை தவறியதாக முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு குறித்த தனது கருத்தை விளக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.