சுரேஷ் சலேக்கு ஆபத்து ஏற்பட்டால் அநுர அரசே முழுப் பொறுப்பு : விடுக்கப்பட்டுள்ள எசச்சரிக்கை
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைத்திருக்கப்படும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை எச்சரிக்கும் வகையில் தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. "சலேவுக்கான நீதி - கலந்துரையாடல் மன்றம்" என்ற கருப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இவ்வாறு...

தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இந்த விடயத்தை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற "சலேவுக்கான நீதி - கலந்துரையாடல் மன்றம்" என்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்த அமைப்பின் பிரதிநிதிகள், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.