PulseNews
அரசியல்

அன்று உதயநிதி; இன்று நயினார் நாகேந்திரன்... விஜய் குறித்த சர்ச்சைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னையில் மாநில பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாயத்தில் பேசிய தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. 'அப்பாவை காணோம்' என்ற முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரிகமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. தேசிய கொடி இறக்கும் நிகழ்வு: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் திடீரென ஒலித்த த.வெ.க பாடல் நயினார் நாகேந்திரனின் இந்த கருத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 'வீ தீ லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தி.மு.க-வின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் திரு. உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் திரு.... — K.Annamalai (@annamalai_k) August 15, 2026 அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார். நயினார் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது - வன்னி அரசு முதல்வர் விஜய் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும், நயினார் நாகேந்திரன் பேசிய அநாகரிக பேச்சு கடும் கண்டனத்திற்கு உரியது. இதற்கு முன்னரும், நடிகை ஒருவர் குறித்து நயினார் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது. இதுபோன்ற அநாகரிகமான பேச்சுக்கு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்திருந்தார். அரசியல் விரக்தியின் உச்சத்தில் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களையும் அவரது தாயாரையும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரிகமற்ற முறையில் தரம் தாழ்ந்து பேசுவது இவருக்கு இது முதல் முறையல்ல; தொடர் வாடிக்கையாகிவிட்டது.... — Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 15, 2026 நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - மாணிக்கம் தாகூர் அரசியல் விரக்தியின் உச்சத்தில், முதல்வர் விஜய், அவரது தாய் குறித்து, நயினார் நாகேந்திரன் இழிவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரிகமின்றி, தரம் தாழ்ந்து பேசுவது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது. பொதுவெளியில் கவனம் பெற, பெண்களை இழிவுபடுத்தும், அருவருப்பு பேச்சுக்கு தமிழக மக்களிடமும், முதல்வரிடமும் உடனடியாக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அன்று உதயநிதி; இன்று நயினார் நாகேந்திரன்... விஜய் குறித்த சர்ச்சைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்
PulseNews சுருக்கம்

சென்னையில் உள்ள பா.ஜ.க மாநில தலைமை அலுவலகமான கமலாயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அவர் அநாகரிகமான முறையில் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முதலமைச்சர் விஜய் முன்னதாக ‘அப்பாவைக் காணோம்’ என்று பேசியதற்குப் பதிலடியாகவே நயினார் நாகேந்திரன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவரது இந்தப் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics