“தொகுதி மறுவரையறை.. தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை!”.. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!
Southern Zonal Council: தென் மண்டல கவுன்சில் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். தமிழகத்திற்குரிய 39 மக்களவைத் தொகுதிகள் பாதிக்கப்படக் கூடாது என்றும், காவேரி மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரங்கள் குறித்தும் அவர் பேசினார்.

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு தொடர்பான விவகாரங்கள் குறித்தும் அவர் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.