பேரணி நடத்த திக, பாஜகவுக்கு அனுமதி கிடையாது... தவெகவுக்கு மட்டும் அனுமதியா? - உயர் நீதிமன்றம் கேள்வி
‘தேசியக் கொடியை ஏந்தியதற்காக உயிர்நீத்த திருப்பூர் குமரன் வாழ்ந்த நாட்டில், தேசிய கொடியை ஏந்தி பேரணி செல்ல மறுப்பதா ? கோவை என்ன பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானை சேர்ந்ததா ?’ என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், ‘பேரணி நடத்த தி.க.-வுக்கு அனுமதி கிடையாது; பாஜகவுக்கு அனுமதி கிடையாது; தவெகவுக்கு மட்டும் அனுமதியா ?’ என்று வினவியுள்ளது

கோவையில் பேரணி நடத்த திராவிடர் கழகத்திற்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருப்பூர் குமரன் பிறந்த மண்ணில் தேசியக் கொடியுடன் பேரணி செல்ல அனுமதி மறுக்கப்படுவது ஏற்புடையதல்ல என்றும், கோவையை பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் என்று கருதுகிறீர்களா என்றும் நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.