மேட்டூர் அணையை திறந்து வைத்து காவிரி அன்னையை வணங்கிய முதல்வர் விஜய் - கல்லணைக்கு எப்போது செல்லும்?
<p>டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்து, காவிரி அன்னைக்கு மலர்களை தூவி வணங்கினார்.</p> <p>காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணையில் இருந்து 92-வது ஆண்டாக பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் வாயிலாக 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றனர். </p> <p>காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் அணையில் இருக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்தும் அணைக்கான நீர் வரத்தைப் பொறுத்தும் அணை திறக்கப்படும் நாள் வேறுபடும். ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் அணை ஜனவரி 28-ம் தேதி மூடப்படும். இந்த காலகட்டத்தில் 330 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி சுமார் 17 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் பயிர்கள் விளைவிக்கப்படும்.பாசனப் பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் பாசனத் தேவை குறையும்.</p> <p> </p> <p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/y106eSsZkTY?si=oii4LzCdvyPbGqaC" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <p>காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டுமானால் அணையில் குறைந்தபட்சம் 90 அடிக்கு நீர் இருந்தால் மட்டுமே சாகுபடிக்கு முழுமையாக நீர் திறக்க முடியும். நடப்பாண்டில் அணையில் போதுமான நீர்இருப்பு இல்லாத காரணத்தால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை. </p> <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/01/e7d402f36279014582266f437af8d16b1788251064367113_original.jpg" width="720" /></p> <p>கேரளா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வத்து அதிகரித்து நிரம்பியது. பின்னர், கபினி, கேஆர்எஸ் அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.</p> <p>அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் 45 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்தும், குடிநீர் மற்றும் காவிரி டெல்டா பாசன தேவைகளை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் கோரிக்கை ஏற்று அணை திறக்கப்பட்டுள்ளது. </p> <p>தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முதல் முறையாக அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 8 கண் மதகுகளை மின் விசையால் இயக்கி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை அவர் விடுவித்தார். பின்னர் காவிரி அன்னைக்கு மலர்களைத் தூவி அவர் வணங்கினார். இந்நிகழ்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், போக்குவரத்துத் துறை அமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> தமிழன் பார்த்திபன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.</p> <p>இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர் 200 கிலோமீட்டர் பயணித்து மூன்றரை நாட்களில் கல்லணையைச் சென்றடையும். அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணைமின் நிலையம், சுரங்க மின்நிலையம், 7 கதவணை மின் நிலையங்கள் வாயிலாக 460 மெகாவாட் மின்சார உற்பத்தியும் தொடங்கியுள்ளது.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690" width="631" height="381" scrolling="no"></iframe></p> <p> </p>

டெல்டா பகுதி பாசனத் தேவைக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, அவர் காவிரி அன்னைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
காவிரி டெல்டா பாசனத்தின் ஆதாரமாகத் திகழும் இந்த அணையில் இருந்து 92-வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.