PulseNews
அரசியல்

"ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் போர் மூண்டது!": ஈரானியத் தீவு மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் - ஏவுகணைகளை வீசி ஈரான் பதிலடி!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தம் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு ஈரானின் லராக் (Larak) தீவைக் குறிவைத்து அமெரிக்கப் போர் விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தின. ஏவுதளங்கள் அழிப்பு: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள இக் முக்கியத் தீவில் இருந்த ஈரானின் 2 ஏவுகணைத் தளங்கள், கடல் கண்ணிவெடிகளை வீசும் கப்பல் மற்றும் பல படகுகள் அமெரிக்கப் படையினரால் அடியோடு அழிக்கப்பட்டன. உயிரிழப்புகள்: இத் திடீர் தாக்குதலில் ஈரான் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் பதிலடி அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ராணுவம் உடனடியாக எதிர்த்தாக்குதலைத் தொடங்கியது: ஜோர்டான் படைத்தளங்கள் மீது தாக்குதல்: ஈரானின் வடக்குப் பகுதியில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஜோர்டானில் உள்ள அமெரிக்க வான்படைத் தளங்களான ‘கிங் ஹுசைன்’ மற்றும் ‘அல்-அஸ்ராக்’ ஆகியவற்றை நோக்கிக் பாய்ந்தன. இவற்றில் பெரும்பாலானவை நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட போதிலும், சில ஏவுகணைகள் படைத்தளங்களில் விழுந்து வெடித்தன. துபாய் அருகே ட்ரோன் தாக்குதல்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அருகேயுள்ள ‘அல் மின்ஹாட்’ வான்படைத் தளத்தைக் குறிவைத்து ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களும் நடுவானில் முறியடிக்கப்பட்டன. அமெரிக்காவின் அத்துமீறல்களுக்குத் தகுந்த பதிலடி தொடரும் என ஈரான் எச்சரித்துள்ளது. அதிபர் டிரம்பின் AI வீடியோ மற்றும் ஹார்முஸ் முடக்கம் செயற்கை நுண்ணறிவு வீடியோ: ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவின் எண்ணெய் கிணறுகள் மற்றும் கப்பல்கள் தீப்பற்றி எரிவது போன்று செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட இரு வீடியோக்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். கப்பல் போக்குவரத்து முடக்கம்: போர் தீவிரமடைந்துள்ளதால் ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான சரக்குக் கப்பல் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது. அங்கு சுமார் 83 கச்சா எண்ணெய் கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தாக்குதலின் பின்னணியும் அமெரிக்க எச்சரிக்கையும் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வந்த சூழலில், அமெரிக்காவின் தலையீடு இன்றி இப் பாதையை இணைத்து நிர்வகிக்க ஈரானும் ஓமனும் அண்மையில் ஒப்பந்தம் செய்துகொண்டன. இதன் தொடர்ச்சியாகவே, கச்சா எண்ணெய் கப்பல்களிடம் ஈரான் தலா ₹19 கோடி சுங்கக் கட்டணம் வசூலித்து வந்த லராக் தீவை அமெரிக்கா தகர்த்துள்ளது. மேலும், ஈரானுடன் இணைந்து செயல்பட்டால் ஓமன் பகுதிகள் மீதும் கடும் தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
"ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் போர் மூண்டது!": ஈரானியத் தீவு மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் - ஏவுகணைகளை வீசி ஈரான் பதிலடி!
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லராக் தீவு மீது அமெரிக்க போர் விமானங்கள் அதிரடித் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலில் ஈரானின் இரண்டு ஏவுகணைத் தளங்கள், கடல் கண்ணிவெடிகளை வீசும் கப்பல் மற்றும் பல படகுகளை அமெரிக்கப் படைகள் முழுமையாக அழித்தன.

அமெரிக்காவின் இந்த திடீர் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தரப்பிலிருந்து ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்த மோதலில் ஈரான் ராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics