யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச உத்தியோகத்தருக்கு நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான இன்று (30)ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில், உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார். அலுவலகத்திற்...

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றிய நிசாந்தன் சிந்துப்பிரியா (37) என்ற இரண்டு பிள்ளைகளின் தாய், ஞாயிற்றுக்கிழமை (30) பணிக்கு அழைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். விடுமுறை நாளான இன்று அலுவலகப் பணிக்காகச் சென்றிருந்த அவர், அங்கு ஏற்பட்ட பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் உடுவில் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த பெண் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.