கைதிகள் வெளியே சென்று வேலை செய்யலாம்: ஜார்க்கண்டில் புதிய திட்டம்
ஜார்க்கண்ட் கைதி வேலை திட்டம்: நல்ல நடத்தை கொண்ட கைதிகள் பகலில் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்து குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தை சம்பாதித்து, மாலையில் மீண்டும் சிறைக்கு திரும்பும் புதிய திறந்தவெளிச் சிறை திட்டம் நான்கு மத்திய சிறைகளில் தொடக்கம். Jharkhand prisoner work scheme: Selected well-behaved inmates allowed daytime outside work with strict monitoring, returning by evening under new open jail initiative launched in four central prisons.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள நான்கு மத்திய சிறைகளில் புதிய திறந்தவெளிச் சிறைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகள் பகல் நேரத்தில் மட்டும் வெளியே சென்று வேலை செய்து, தங்கள் குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு வேலைக்குச் செல்லும் கைதிகள் அனைவரும் மாலை நேரத்தில் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டும். இவர்களுக்குக் கடுமையான கண்காணிப்புடன் கூடிய இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.