PulseNews
அரசியல்

பரபரப்பு! அமைச்சரவையில் இருந்து மரிய வில்சன் நீக்கம்? அதிரடி புகார்..!!!

சட்டப்பேரவையில் லஞ்சம் தொடர்பாக மரிய வில்சன் பேசிய விவகாரம் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. அவரை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். லஞ்சம் கொடுத்ததாகவும், பெற்றதாகவும் கூறப்படும் இருதரப்பினர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முதல்வர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய மரிய வில்சன், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு தான் லஞ்சம் கொடுத்ததாக பகிரங்கமாக தெரிவித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதையும் படிங்க: BREAKING: அதிமுகவிலிருந்து மேலும் 5 எம்.எல். ஏக்கள் தவெக பக்கம் தாவல்? இறுதிகட்டத்தை எட்டியது.... செம ஷாக்கில் எடப்பாடி!!! இதுபோன்ற குற்றச்சாட்டு பேரவை மன்றத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது. முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். லஞ்சம் கொடுப்பதும் குற்றமே என வலியுறுத்தல் லஞ்சம் வாங்குவது எப்படி குற்றமோ, அதேபோல் லஞ்சம் கொடுப்பதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, புகாரில் தொடர்புடைய இருதரப்பினர் மீதும் எந்த தயக்கமும் இல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், லஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பாக அரசு தெளிவான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் இருந்து மரிய வில்சனை நீக்குவது மட்டுமின்றி, விவகாரத்தில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதையும் படிங்க: ஒரே நாளில் மாறிட்டுச்சே.... விஜய் அரசுக்கு அண்ணாமலை கொடுத்த ஷாக் டிரீட்மென்ட்.... பதறும் தவெக... எகிரும் திமுக..!!!

Tamil Spark14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பரபரப்பு! அமைச்சரவையில் இருந்து மரிய வில்சன் நீக்கம்? அதிரடி புகார்..!!!
PulseNews சுருக்கம்

சட்டப்பேரவையில் லஞ்சம் குறித்த விவகாரத்தைப் பேசிய மரிய வில்சனை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் கொடுத்தவர்கள் மற்றும் பெற்றவர்கள் என இரு தரப்பினர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் விஜய் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics