அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம்! ரணில் தரப்பு அநுரவுக்கு அனுப்பிய அவசர கடிதம்
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தினால் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 107(5) ஆம் உறுப்புரைக்கான திருத்தங்கள் தொடர்பில் மக்களின் விருப்பத்தை அறிந்துகொள்ள அரசியலமைப்பின் 13ஆவது அத்தியாயத்திற்கு அ...

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள 107(5) ஆம் உறுப்புரை திருத்தங்கள் குறித்து பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் எதிர்க்கட்சியினர் கோரியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் இதற்கான அவசரக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது.
இந்த திருத்தங்கள் தொடர்பாக மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்காக அரசியலமைப்பின் 13ஆவது அத்தியாயத்தின் கீழ் பொதுவாக்கெடுப்பை நடத்துமாறு அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தரப்பினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.