தேர்தல் வழக்கு.. முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!!
Madras High Court Warns: தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரும் மனுவைத் தாக்கல் செய்ய வியாழக்கிழமைக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த விரிவான செய்தித் தொகுப்பு.

தேர்தல் வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும் என முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை வரும் வியாழக்கிழமைக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த மனுவைத் தாக்கல் செய்யத் தவறினால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.