ஈஸ்டர் தாக்குதலுக்கான புலனாய்வு தகவல்கள் அடங்கிய குறிப்பேடு இராணுவத்திடமிருந்து பறிமுதல்!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, இலங்கை இராணுவத்தின் வவுனியா பிரிவிலிருந்து புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய ஒரு குறிப்பேட்டைப் பறிமுதல் செய்துள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட புலனாய்வுக் குறிப்பேட்டிற்குப் பொறுப்பாளராக இருந்த லெப்டினன்ட் கேணலிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்...

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, இலங்கை இராணுவத்தின் வவுனியா பிரிவிடமிருந்து புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய குறிப்பேடு ஒன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர். இது குறித்த தகவலை அவர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
இந்தக் குறிப்பேட்டின் பொறுப்பாளராக இருந்த லெப்டினன்ட் கேணலிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனது அறிக்கையில் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.