கோயிலுக்கு செல்வதே ஒரு சவாலான அனுபவமாக மாறிவிடக் கூடாது. பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மனநிம்மதியுடனும் இறைவனை தரிசிக்க வழிவகை செய்வதே அரசின் கடமையாகும். இன்று இந்த தவெக அரசு கோயில்களிலும் பக்தர்களிடமும் விதித்து வரும் தொடர்ச்சியான கட்டுப்பாடுகள், இந்து மதத்தையும் பக்தர்களின் உணர்வுகளையும் பாதிக்கும் நடவடிக்கைகளாகp நடவடிக்கைகள் ஆகவும் அவர்கள் மீது தொடுக்கப்படும் மறைமுக மன தாக்குதல்களாகுமே பார்க்கப்படுகிறது. பக்தர்கள் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று, இறைவனை மனநிறைவுடன் தரிசித்து, நமது பாரம்பரியக் கலைச்சிற்பங்களை ரசித்து, கோயில் பிரசாதத்தைப் பெற்று, இறைவனின் ஆசீர்வாதத்துடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பும் சூழலை ஏற்படுத்த வேண்டும். கோயில் என்பது பக்தர்களுக்கு நிம்மதியும் ஆன்மிக மகிழ்ச்சியும் தரும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டுப்பாடுகளும் சிரமங்களும் நிறைந்த இடமாக மாறிவிடக் கூடாது!'' என்று பதிவிட்டுள்ளார்.","image":["https://img.seithipunal.com/large/large_tamilisai-236799.png"],"datePublished":"2026-09-01T06:54:40+00:00","dateModified":"2026-09-01T06:54:40+00:00","author":{"@type":"Organization","name":"Seithipunal"},"publisher":{"@id":"https://www.pulsenewscast.com/#organization"},"mainEntityOfPage":{"@type":"WebPage","@id":"https://www.pulsenewscast.com/ta/politics/87372a9bb7f4"}}
PulseNews
அரசியல்

'இறைவனை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?'; தமிழிசை சௌந்தரராஜன்..!

''கோயில் என்பது பக்தர்களுக்கு நிம்மதியும் ஆன்மிக மகிழ்ச்சியும் தரும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டுப்பாடுகளும் சிரமங்களும் நிறைந்த இடமாக மாறிவிடக் கூடாது.'' என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; ''இறைவனை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக, அதனை வைப்பதற்கே ₹5 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே இறைவனை தரிசிக்க வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இப்போது குடும்பத்தோடு வரும் பக்தர்கள், தங்களது செல்போனை வைப்பதற்காகவும் தனியாக வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது மிகவும் வருந்தத்தக்கது. <blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">இறைவனை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?<br>கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக, அதனை வைப்பதற்கே ₹5 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கண்டிக்கத்தக்கது.<br><br>ஏற்கனவே இறைவனை தரிசிக்க வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இப்போது குடும்பத்தோடு... <a href="https://t.co/akkgoizRtE">pic.twitter.com/akkgoizRtE</a></p>— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) <a href="https://x.com/DrTamilisai4BJP/status/2094725258871988302?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script> கோயிலுக்கு செல்வதே ஒரு சவாலான அனுபவமாக மாறிவிடக் கூடாது. பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மனநிம்மதியுடனும் இறைவனை தரிசிக்க வழிவகை செய்வதே அரசின் கடமையாகும். இன்று இந்த தவெக அரசு கோயில்களிலும் பக்தர்களிடமும் விதித்து வரும் தொடர்ச்சியான கட்டுப்பாடுகள், இந்து மதத்தையும் பக்தர்களின் உணர்வுகளையும் பாதிக்கும் நடவடிக்கைகளாகp நடவடிக்கைகள் ஆகவும் அவர்கள் மீது தொடுக்கப்படும் மறைமுக மன தாக்குதல்களாகுமே பார்க்கப்படுகிறது. பக்தர்கள் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று, இறைவனை மனநிறைவுடன் தரிசித்து, நமது பாரம்பரியக் கலைச்சிற்பங்களை ரசித்து, கோயில் பிரசாதத்தைப் பெற்று, இறைவனின் ஆசீர்வாதத்துடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பும் சூழலை ஏற்படுத்த வேண்டும். கோயில் என்பது பக்தர்களுக்கு நிம்மதியும் ஆன்மிக மகிழ்ச்சியும் தரும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டுப்பாடுகளும் சிரமங்களும் நிறைந்த இடமாக மாறிவிடக் கூடாது!'' என்று பதிவிட்டுள்ளார்.

Seithipunal14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'இறைவனை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?'; தமிழிசை சௌந்தரராஜன்..!
PulseNews சுருக்கம்

கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளும் சிரமங்களும் விதிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். கோயில்கள் பக்தர்களுக்கு ஆன்மிக மகிழ்ச்சியையும் மனநிம்மதியையும் அளிக்க வேண்டுமே தவிர, தேவையற்ற சிக்கல்களை உருவாக்குமிடமாக இருக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அவர் கண்டித்துள்ளார். இறைவனை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் ஏன் தேவை என்று தனது எக்ஸ் தள பதிவில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics