"நீதிக்கான நீள்பயணம்"யாழில் ஆரம்பமானது சர்வதேச மாநாடு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு ஆரம்பமாகியுள்ளது. மாநாட்டுக்கு முன்னதாக இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபியிலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டு, தந்தை செல்வா கலையரங்கை அடைந்து, நீதிக்கான நீள் பயணம் என்ற சர்வதேச மாநாடு ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ...

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் "நீதிக்கான நீள்பயணம்" என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு தந்தை செல்வா கலையரங்கில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த மாநாட்டிற்கு முன்னதாக, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக உள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் இருந்து தந்தை செல்வா கலையரங்கம் வரை கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடைபெற்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து இந்த சர்வதேச மாநாட்டை முன்னெடுத்துள்ளனர். நீதிக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி இடம்பெறும் இந்த நிகழ்வில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.