மொட்டுவின் இளம் எம்.பிக்கள் இருவரின் தீவிர ஆதரவாளரான'இரத்மலானே சைமா' :விசாரணையில் அம்பலம்
மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் 'கஞ்சிபானி இம்ரானின்' நெருங்கிய சகாவான 41 வயதான 'இரத்மலானே சைமா' என்ற தனுஷ்க கோசல, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளம் எம்.பி.க்களின் பலமான ஆதரவாளராக இருந்துள்ளமை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பேராதனை மற்றும் கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது இந்த அரசியல் தொடர்புகள் பற்றிய தகவல...

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான 'கஞ்சிபானி இம்ரானின்' நெருங்கிய கூட்டாளி 'இரத்மலானே சைமா' எனப்படும் தனுஷ்க கோசல கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான இவரிடம் பேராதனை மற்றும் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய நீண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த கண்டி மாவட்டத்தின் இரண்டு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தனுஷ்க கோசல பலமான ஆதரவாளராகச் செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கைதாகியுள்ள இவரிடம் இது குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.